Mai 2, 2024

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்அடங்கிய குழுவினர் வழங்கியுள்ளனர்.அதேவேளை , பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தது இருப்பினும் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாவை செலவுத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, புவேனக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert