ரஷ்யாவுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படுகிறது – புடின்

உலகம் மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது என யேர்மனி நாசிகளைத் தோற்கடித்த வெற்றி நாளை கொண்டாடும் மே 9 வெற்றி நாளில் கிரெம்ளினில் சிவப்பு சதுக்கத்தில் இருந்து உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைத் தெரிவித்தார்.

இன்று நாகரிகம் மீண்டும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் உள்ளது. நமது தாய்நாட்டிற்கு எதிராக ஒரு உண்மையான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று அவர் இன்று செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த அணிவகுப்பின் போது கூறினார்.

நாஜிகளை யார் தோற்கடித்தார்கள் என்பதை மேற்கு நாடுகள் மறந்துவிட்டன. உக்ரைன் நாஜி யேர்மனியைப் போன்றது என்ற மீண்டும் கூறினார்.

dtd=33

மேற்கத்திய உலகமய உயரடுக்குகள், ருஸ்ஸோபோபியா மற்றும் ஆக்கிரமிப்பு தேசியவாதத்தை விதைக்கின்றன. அதே நேரத்தில் உக்ரேனிய மக்கள் அரசு சதிக்கு பணயக்கைதிகளாக மேற்கு நாடுகளின் இலட்சியங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.

ht

14 மாதங்களுக்கு முன்பு ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்தபோது அவர் தொடங்கிய மோதலுக்கு மேற்கின் அடங்காத இலட்சியங்கள், ஆணவம் மற்றும் தண்டனையின்மை என்பனதான் காரணம் என்று புடின் வலியுறுத்தினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert