April 25, 2024

இங்கிலாந்து துணைப் பிரதமராக ஒலிவர் டவுடன் நியமனம்

டொமினிக் ராப் பதவி விலகியதையடுத்து ஒலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த சட்டவாளர்கள் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவி விலகுவதாக அறிவித்தார். டொமினிக் ராப் பதவி விலகியதை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே அறிவிப்பில், சட்டமியற்றுபவர் அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert