März 29, 2024

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக டுசில்டோர்வ், கம்பேர்க் மற்றும் கேளின் பொன் விமான நிலையங்களே வெறிச்சோடிக் காணப்பட்டன.

இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் சம்பளம் வழங்கக் கோரி, விமான நிலையங்களின் பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக யேர்மன் விமான நிலைய சங்கம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, யேர்மனி தொடருந்து மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் நாடு தழுவிய போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert