März 28, 2024

மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் !

னார்

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இலங்கை அரசு இரகசிய பேச்சுக்களில் குதித்துள்ளது.

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்தும் தமிழர் கடலை குத்தகைக்கு வழங்குவதை கண்டித்தும்  வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து மன்னாரில்  எதிர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய மீனவர்களின் இழுவை படகுகள்   அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர்  இந்திய  படகுகளை இலங்கை கடலில் கடல் தொழில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மீனவர்களது போராட்டத்திற்கு தரவாக மன்னார் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து   அருட்தந்தையர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert