April 23, 2024

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் குறித்த மதிய உணவுத் திட்டம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert