April 25, 2024

உக்ரைனுக்குள் நுழைந்த புதின்

உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார். ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணம் உக்ரைன் – ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert