April 24, 2024

யாழில் வெளியே அனுப்பப்பட்ட துப்பரவு பணியாளர்கள்

யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு பணியாளர்கள் உணவு பெற்று அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கவில்லை.

அதோடு துப்பரவு பணியாளர்களை வெளியே சென்று வேறு இடத்தில் உணவருந்துமாறு உணவக நிவாகிகளால் பணிக்கபட்டு பொதிசெய்து கொடுக்கபட்டது.

இந்நிலையில் சம்பந்தபட்ட நிர்வாக உத்தியோகஸ்தர்கள் கவனத்திலெடுத்து இந்த பாரபட்சத்தை நீக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert