April 20, 2024

பிரான்ஸ் தூதருக்கும் அழுத்தம்:சாணக்கியன்!

விரைவான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு இன்றைய தினம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தமிழரசுகட்சியின் சாம் அணி அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது இவ் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது. 

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழரசுகட்சியின் சாம் அணி அறிவித்துள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert