März 28, 2024

60 மேல் அனுமதியில்லை!

பஸிலின் 65வயது வரையான சேவைக்கு அனுமதியில்லையென தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதி அமைச்சின் செயலாளரும் அதன் அதிகாரிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 60 வயதை அடையும் நாடாளுமன்றத்தின் 27 அதிகாரிகள் நீண்ட சேவையைப் பெற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினால், ஒட்டுமொத்த அரச சேவையும் சிக்கலில் சிக்குவதை தடுக்க முடியாது.

எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளுக்கு சேவைகளை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert