April 20, 2024

பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் ஆரம்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்ததுடன், மாவீர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, மலர் அஞ்சலி இடம்பெற்றது

இன்றிலிருந்து எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert