März 28, 2024

பாராளுமன்றத்தின் எதிர்காலம்?

இலங்கை பாராளுமன்றம் இன்று (08)  கூடவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக்கூட்டம் இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert