März 28, 2024

மாவீரர் நினைவேந்தலிற்கு தயாராகும் தேசம்!

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் துயிலுமில்லங்கள் வெளிச்சம் பெற தொடங்கியுள்ளன.

ஏற்கனவே வன்னியில் துயிலுமில்ல பகுதிகளில் சிரமதானப்பணிகளில் மக்கள் இணைந்துள்ள நிலையின் யாழ் பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டுள்ளது.

சுpரமதானத்தை தொடர்ந்து மாணவர்களால் மாவீரர் நினைவுத்தூபிக்கு ஆத்மார்த்தரீதியாக மலரஞ்ஞலி செலுத்தப்பட்டது.

அதிகளவான மாணவர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும்; உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவ படத்திற்கு பல்கலை மாணவர்ளால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான செல்லத்துரை புருசோத்தமன் இராணுவத்தினரால் கடந்த 2008.11.01 இதே நாளன்று படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் (2006-2007) கலைப்பிட மாணவர் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்று மாணவர் நலனிலும் பல்கலைக்கழக நலனிலும் அக்கறை கொண்டு செயற்பட்டதுடன் தமிழ்த்தேசிய நலனிலும் பற்றுடையவராகத் திகழ்ந்தார்.

சமூகவியற் துறையில் 2ம் நிலையில் தேர்ச்சி பெற்று ஆளுமையுள்ள பட்டதாரியாக வெளியேறி குறுகிய காலப்பகுதியில் (01.11.2008) இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert