April 20, 2024

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தொடந்து இயங்க விருப்பும் பேருந்து உரிமையாளர்கள்!!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட புதிய நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் S.L.T.B மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பல காலமாக செயல்படாமல் இருந்த நிலையில் பல முயற்சிகள் எடுத்த போதும் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களின் முயற்சியில் யாழ். கொழும்பு தனியார் பேருந்துகள் தற்போது குறித்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படுகிறது

கடந்த ஒரு மாதமாக பரீட்சார்த்தமாக பேருந்து சேவை நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு புதிய பேருந்து நிலையம் பழைய பண்ணையில் இருந்த பேருந்து நிலையத்தை விட அதிக வசதிகள் கிடைப்பதாகவும் குறிப்பாக மலசலகூட வசதிகள் மற்றும் மழை நேரத்தில் ஒதுங்கி இருப்பதற்கு வசதிகள் இருப்பதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

பேருந்து உரிமையாளர்கள் தாம் தொடர்ந்தும் குறித்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். (செய்தி – பு.கஜிந்தன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert