April 25, 2024

புலித்தடை நீக்க கோரிக்கை!

புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகள் அவர்களது தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என கோரிக்கையினை நாம் வைத்தோம் ,குறிப்பாக தெற்காசிய  பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா புலிகளின் மீதான தடையை  நீக்க  வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அத்தோடு தமிழர்களுக்கான ஒரு சமஸ்டி  அடிப்படையில் தீர்வுவழங்கப்படவேண்டும் 87 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் இந்தியா 13 ஐ நடைமுறை ப்படுத்தக் கோரி ஐநா சபையில் வலியுறுத்தியது போல இங்கே அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை  நாங்கள் விடுத்திருக்கின்றோம் என ஜனநாயகப்போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert