April 19, 2024

முகமாலை விபத்து: 47 பேர் காயம்!!

முகமாலையில் இன்று பேருந்தும் ஒன்றும் கனரக வாகனமான டிப்பர் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணித்த 47 பேர் காயமடைந்தனர்.

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

டிப்பரை முந்திச் செல்ல பேருந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert