யாழ் பண்ணைப் பகுதியில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்துள்ளனர்.

தட அறிவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் இணைந்து இந்த அகழ்வு பணியினை முன்னெடுத்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert