März 28, 2024

யாழில் நூற்றுக்கணக்கில் கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்த நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று காலை 6 மணி முதல் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert