März 28, 2024

ஜெயராஜை பஸிலே கொன்றார்! அம்பலமான உண்மை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பசில் ராஜபக்ச என விடுவிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே தெரிவித்துள்ளார். 

வெலிவேரியவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ஜெயராஜ் கலந்து கொண்டார். 06.04.2008 அன்று வெலிவேரிய மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை உட்பட 16 பேர்; கொல்லப்பட்டனர்.

டி.எம்.தசநாயக்க மற்றும் ஜெயராஜ் கொலையாளிகளுடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் குண்டுவெடிப்புடன் பசிலின் தொடர்பு குறித்து ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்றுவரை யாரும் பதில் அளிக்கவில்லையெனவும் விடுதலையான காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert