April 20, 2024

உலகின் மிகசிறந்த நாடாக பிரித்தானியாவை உருவாக்க உழைப்பேன் – சுனாக்

பிரித்தானியாவை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குபதிவு வருகிற திங்களன்று நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நேற்றிரவு இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்றது.

புதிய பிரதமருக்கான தேர்வில் ரிஷி சுனாக்கிற்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert