April 18, 2024

இலங்கை செல்லும் இந்தியக் குடிமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் தனது நாட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியதோடு, அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அந்நாட்டின் நாணய மாற்றத்திறன் மற்றும் எரிபொருள் நிலைமை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ளுமாறு இந்தியா இந்தியக் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்று வியாழக்கிழமை கூறுகையில்:-

இலங்கையில் முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியர்கள் உள்ளனர் என்பது எங்கள் புரிதல். 

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கான இந்தியர்களின் பயணத்தைப் பொறுத்தவரை, இந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை உட்பட இந்தியாவுக்கு வெளியே தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்பொழுதும் எங்களுக்கு முதன்மையான அக்கறை. 

இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எந்த விரும்பத்தகாத சம்பவங்களையும் தடுப்பதே எங்களது முயற்சியாகும். எனவே, இலங்கையில் இருக்கும் போது அனைத்து அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு இந்தியர்களை ஊக்குவிப்போம்.

இலங்கைக்கு எந்தவொரு அத்தியாவசியப் பயணத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர் நாணய மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்று பாக்சி மேலும் கூறினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert