April 19, 2024

நிவாரணத்தால் பலன்:தமிழக மீனவர்களை காப்பற்றினர்.

படகு பழுதாகியதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் மீட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்..

இராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்தப் படகு நேற்றயமுன்தினம் இரவு தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்றது. இதன் இடையே நேற்று காலை வரை இந்த படகு மற்றும் மீனவர்கள் கரை திரும்பாததால் இந்த மீனவர்களை தேடி ஒரு படகில் 5 மீனவர்கள் தேடி சென்றனர்.

 தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி இந்திய கடல் பகுதிக்குள் நின்றது. கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் படகானது இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக இராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் நின்ற இராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை படகுடன் மீட்டு இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் இராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert