உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவருகிறது – டொனி பிளையர்

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருதை காட்டுகிறது என முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயர் கூறினார்.

உக்ரைனுக்குப் பிறகு, மேற்கத்திய தலைமைக்கு இப்போது என்ன பாடங்கள்? என்ற தலைப்பில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கூட்டணியை ஆதரிக்கும் மன்றத்தில் லண்டனுக்கு மேற்கே டிச்லி பூங்காவில் ஆற்றிய விரிவுரையாற்றும்போது அவர் இதனைச் சுட்டிக்காட்னார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவு அல்லது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் ஒப்பிடக்கூடிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் இருப்பதாக பிளேயர் கூறினார்.

ஆனால் இந்த முறை மேற்கு நாடு தெளிவாக ஏறுமுகத்தில் இல்லை. மேற்கத்திய அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தின் முடிவுக்கு வருகிறோம்.

உலகம் குறைந்த பட்சம் இருமுனை மற்றும் பலமுனையாக இருக்கும் என்றார்.

அத்துடன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் மாற்றம் சீனாவில் இருந்து வரும், ரஷ்யா இருந்து அல்ல என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert