April 19, 2024

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் பதவி விலகினர்

பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து பதவி விலகினார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜோன்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், பிரித்தானியாவின் சான்ஸ்சிலர் (நிதி அமைச்சர்) ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் நேற்று திங்கட்கிழமை தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவகாரத்தை போரிஸ் ஜோன்சன் அரசு சரிவர கையாளவில்லை என கூறி அமைச்சரவையில் இருந்து நிதி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் நதீம் சஹாவி நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் செயல்படுவார் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert