April 23, 2024

ரணில் செய்தமை தவறு: கூறுகிறார் சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதற்கான காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்திரியான மார்க் மெலோச்-பிரவுன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவில் வலியுறுத்தியுள்ள அவர், அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால், சர்வதேச நாணய நிதியம் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குப் பதிலாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்

அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 ‚இதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 

எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது. 

ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயமாகும்.

அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறாகும்‘ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert