April 20, 2024

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2035 இல் பெற்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளுக்குத் தடை!

2035 ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஆதரிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை வாக்களித்தனர். ஐரோப்பாவின் மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்தும் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை நிராகரித்தனர்.

அடுத்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை வாகன உற்பத்தியாளர்கள் 100 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்றம் வாக்களித்தது. இந்த உத்தரவு 27 நாடுகளில் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயக்கப்படும் புதிய மகிழுந்துகளை விற்பனைக்குத் தடை விதிக்கப்படும்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த அமர்வில் 24 வாக்கெடுப்புகளுடன் 249க்கு 339 வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டது. நடைமுறையில் எதிர்கால விற்பனையை உமிழ்வு இல்லாத அனைத்து மின்சார மாதிகளும் கட்டுப்படுத்துகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert