März 29, 2024

சஜித் பட்டியிலிருந்து ஆடுகள் தப்பியோட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், முக்கிய பதவிகள் சகிதம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் செல்வார்கள் எனவும் தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுகின்றார். அந்த கட்சியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்

இந்நிலையிலேயே மேலும் 20 பேர் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert