April 19, 2024

நிவாரணம் வழங்க தமிழக அதிகாரிகளிற்கு அனுமதியில்லை?

வடகிழக்கு மற்றும் மலையகத்திற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணங்களது விநியோகத்தை மேற்பார்வை செய்ய தமிழக அரச அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை இந்திய மற்றும் இலங்கை அரசுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசால் இலங்கை மக்களுக்காக அனுப்பப்படும் முதலாவது தொகுதி நிவாரணப் பொருள்கள் ஏற்றிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளன .

 இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையின்படி , 2 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முதல்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . 

 அவற்றில் 9000 மெட்ரிக் தொன் அரிசி , 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்து பொருள்கள் என்பன அடங்குகின்றன . 

 சுமார் 5.5 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தமிழக அரசு இலங்கை மக்களுக்காக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert