März 28, 2024

ஆரியகுளம் -வாய் திறக்கமாட்டேன்:ஜீவன்!

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மறுதலித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநரிடம், ஆரியகுளம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

யாழ் மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை.எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை. எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை தற்போது இல்லை எனவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert