März 28, 2024

சுமந்திரனின் பிரேரணை தோல்வி!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

ரணிலும் கோத்தாவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 109 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அஜித் ராஜபக்ஷ- 109 

ரோஹினி கவிரத்ன – 78

 செல்லுபடியற்ற வாக்குகள் – 25 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert