April 24, 2024

மகிந்த கைது? சுட அனுமதியில்லை – ரணில்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என கோரும் முறைப்பாடொன்றை சட்டத்தரணி சானகபெரேரா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான சதியில் ஈடுபட்டமை-காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையின் முன்னால் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்ய வேண்டும் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறான உத்தரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert