April 20, 2024

கோத்தாவினை எதிர்க்க மாட்டோம்:வாசு!

கோத்தபாயவிற்குஎதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அர்த்தமற்ற பிரேரணை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert