April 19, 2024

அத்தியாவசிய மருந்துகள்:ஆகாயத்தில்!

இலங்கையில் நாளுக்கொரு பொருள் என விலை அதிகரித்துவருகின்ற நிலையில் மருந்து பொருட்களின் விலைகளை  40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2015  ஆண்டின் 5  ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெரசிட்டமோல்,அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert