April 25, 2024

அச்சுவேலியில் அருண் செல்லப்பாவின் மூன்று நாவல்கள் வெளியிடு.

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா எழுதிய மூன்று நாவல்களின் வெளியீட்டு நிகழ்வும், ‘அம்மாவும் நானும்’ நினைவேந்தல் நிகழ்வும் அண்மையில் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றது.

நிகழ்வில் நினைத்தாலே இனிக்கும், அவளுக்கு என்று ஒரு மனம், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய மூன்று நாவல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல்களை அம்பாறை மாவட்ட இளைப்பாறிய மேலதிக அரசாங்க அதிபர் இராமகிருஷ்ணன் செல்லத்துரை வெளியிட்டு வைத்தார்.

குறித்த நிகழ்வில் இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை ஆற்றியதுடன் நூல் மதிப்பீட்டுரைகளை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், கவிதாயினி உடுவிலூர் கலா, ஆசிரியை மதியழகன் சந்திரகாந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதேவேளை, அருண் செல்லப்பா இலங்கை சுங்கத் திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert