März 28, 2024

4ஆம் நாள் போராட்டம்! நெதர்லாந்தில் தொடருகிறது

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனிதநேய ஈருறுளிப்பயணப் போராட்டம், இன்று சனிக்கிழமை (19) Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது.  வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில் பயணித்து 70Km தொலைவினைக்கடந்து இலக்கு நோக்கி அயராது பயணிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் அவையின் 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில், அங்கத்துவ நாடுகள் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டும் மற்றும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு… எனும் கோரிக்கைகளை ஆணித்தரமாக முன்வைத்த தமிழீழ விடுதலையை வென்றெடுக்க 20/20/20/20 அன்று நாடு முழுவதும் தடவையாக நடைபெற்று வருகிறது.  எல்லையினை மதியம் 13.00 மணிக்கு சென்றடையும் எனவே பெல்சியம் வாழ் தமிழ் மக்களே !நீங்கள் பேரணியாக ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் இணைந்திட அழைக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert