März 29, 2024

இங்கிலாந்தில் புயல் எச்சிக்கை! சாதனா

பிரித்தானியா
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இப்புயல் காரணமாக இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சேதம் ஏற்படலாம், தொடருந்துகள் இரத்து செய்யப்படலாம், வீதி விபத்துக்கள் ஏற்படலாம் மற்றும் மின்வெட்டு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பள்ளிகள் மூடப்படுகின்றன.

சிவப்பு எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:00 முதல் 12:00 வரை விடுக்கப்பட்டுள்ளது.
டெவோன், கார்ன்வால் மற்றும் சோமர்செட் கடற்கரை மற்றும் வேல்ஸின் தெற்கு கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் புயலின் போது வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 05:00 முதல் 21:00 மணி வரை வேல்ஸின் மற்ற பகுதிகளிலும், இங்கிலாந்தின் வடக்கே மான்செஸ்டர் வரையிலும் காற்றின் குறைந்த எச்சரிக்கை உள்ளது.

வேல்ஸில் உள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தொருந்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கும் இடையூறு காரணமாக பயணிக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றன.

ஏறக்குறைய அனைத்து வெல்ஷ் கவுன்சில்கள் மற்றும் சோமர்செட் கவுண்டி கவுன்சில் வெள்ளிக்கிழமை தங்கள் பள்ளிகள் மூடப்படும் என்று கூறியது. டெவோன் மற்றும் கார்ன்வால் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் மூடப்படும். மேலும் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று பிரிஸ்டல் நகர சபை அறிவுறுத்தியதாகக் கூறியது.

வரவிருக்கும் புயலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க அரசாங்கம் அவசர கோப்ரா கூட்டத்தை நடத்தியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert