மரணத்தில் சந்தேகம்!

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்றுள்ள சம்பவத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர், தொழில் நித்தம் காரணமாக ஜெயந்திநகரில் வசித்து வந்ததாகவும், கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தராக, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளதாகவும், இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .ந்த நிலையில், நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல தங்கியுள்ளது.

அந்த வகையில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.