April 20, 2024

மன்னாரில் நாளை பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் பணிப்புறக்கணிப்பு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.