März 28, 2024

நாம் அனைவரும் விழித்து எழாவிட்டால் எம்மை கூடிய விரைவில் அழித்து விடுவார்கள்! (ச.வி கிருபாகரன்)

யாவருக்கும் வணக்கம்!! நாட்டில் நிலைமை, நாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிக மிக மோசமாக போய் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், நாம் எப்படியாக மே 2009 முன்பு வேலை செய்தோமோ, அப்படியாக இன்றும் வேலை செய்து – எமது மக்களை, எமது நிலத்தை, எமது மொழி கலை கலாச்சாரத்தை காப்பாற்ற ஒவ்வொரு தமிழரும், விசேடமாக ஈழத்தமிழரும் கடமைப்பட்டுள்ளார்கள். இவ் வரலாற்று கடமையிலிருந்து நாம் தவறும் பட்சத்தில், எமது சரித்திரத்தை, சிங்கள பெளத்த அரசு, துரோகிகளுடனும், போலி தமிழருடன் இணைந்து எம்மை கூடிய விரைவில் அழித்து விடுவார்கள். இன்று – சர்வதேசம், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா போன்ற நாடுகள் இலங்கைதீவில் வாழும் தமிழர்களிற்கு ஓர் அரசியல் தீர்வை தேடி தர தயாராக உள்ள நிலையில், தமிழர்களாகிய நாம், தயாராக இல்லாத பரிதாப நிலையை நாம் கண்முன் பார்க்கிறோம். ஆகையால், இன்றிலிருந்து தயவு செய்து – பகிடி, அலட்டல், விஷமத்தனமான கொளுவல், சிக்கல், கோள்மூட்டல்கள் தவிர்த்து, எமது அரசியல் விடிவிற்கு உண்மையாக நேர்மையாக ஊழையுங்கள். „காலம் கசிந்துள்ளது“. நன்றி. கிருபா (ச.வி கிருபாகரன்) பாரிஸ், பிரான்ஸ்,