April 23, 2024

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை பல கடிதங்கள் எழுதியிருப்போம், தீர்வு கோரி அது பலனில்லை, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு என எதிலும் நம்பிக்கை இல்லை, இன்று படாத பாடு படுகிறோம், பொருளாதார துன்பங்களை அனுபவிக்கிறோம், எதிலும் நம்பிக்கையில்லை, என கண்ணீர் மல்க இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.