April 20, 2024

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 10.12.2021 இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பித்த  நீதி வேண்டிய கவனயீர்ப்பு போராட்டம்  கிளிநொச்சி டிப்போ சந்தி வரை முன்னெடுத்தார்கள்.

இதன் போது சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு மின்னஞ்சல் ஊடக அனுப்பவுள்ள மகஜரும் ஊடகங்களிடம் கையளிக்கப்பட்டது.