April 19, 2024

முள்ளிவாய்க்கால் : 7 மாதங்களின் பின் பிணை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைதான 10 பொதுமக்களும் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்குடா பொலிஸாரினால் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.