April 25, 2024

யாழ். கைதடியில் வெடித்த எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையிலேயே கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.