April 24, 2024

கடல் குளியல்! காணாமல் போன மூவரும் இவர்கள் தான்! ஒருவர் சலடமாக மீட்பு!

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலிலிற்கு வந்து  குளித்துக் கொண்டிருந்த மூவர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவிலிருந்து  முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று  இளைஞர் இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது கடலில் மூழ்கியுள்ளனர்.

குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த  யுவதி  முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை  தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

தேடுதலின் போது  ஒருவருடைய உடலம்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த இளைஞர்களில்  மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன்  (வயது_27),  சிவலிங்கம் சமிலன் (வயது_26) , தோணிக்கல் பகுதியை சேர்ந்த  விஜயகுமாரன் தர்சன்  (வயது_26) ஆகியோரே கடலில் மாயமாகியுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து கூடச் சென்ற யுவதியிடம்  முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.