April 25, 2024

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை இராசையா

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா வேலுப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நளினி(JP, ஆசிரியை- மு/பாண்டியன்குளம் ஆரம்ப பாடசாலை), காலஞ்சென்ற யாழினி, அருணன், சிவகனேஷன், கிருஷ்ணவேணி(முன்னாள் விவசாய போதனா ஆசிரியர்), இதயவாணி, மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஜிமளா, சிவகுமார், தினேஷ், பிரதீஸ் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராசா மற்றும் இரத்தினம், காலஞ்சென்ற சின்னராசு, சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சிவப்பாக்கியம் மற்றும் சிவசாமி(முன்னாள் ஆசிரியர்- யாழ். இந்துக்கல்லூரி), யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, கந்தசாமி, யோகம்மா நடராஜா, சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை மற்றும் கெளசலா, சிவநந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

சோபிதா, அஸ்வின் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

நளினி – மகள்

சிவகனேஷன் – மகன்

மாலினி – மகள்

தினேஷ் – மருமகன்

சிவசாமி – சகோதரன்

யோகன் – சகோதரன்