März 29, 2024

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

 

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழிபுரியும் தொழிலாளர்களுக்கு இலங்கை மத்தியவங்கி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக 10 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ள்ளது. இந்த சலுகை, இந்த டிசம்பர் மாதத்திற்கு மாத்திரம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.