April 20, 2024

புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

ஏற்கனவே பயனாளரின் தொலைபேசி எண், முகவரி தனிப்பட்ட தகவல்களை வெளியிட தடை செய்துள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் ஒப்புதல் இன்றி பகிர தடை செய்து புது விதிமுறையை டுவிட்டர் அறிவித்துள்ளது.
புது விதிகளின்படி பயனர்கள் தங்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டுவிட்டரில் இருந்து அகற்றப்படும்.