April 20, 2024

வீதியில் எழுதப்பட்டது “மாவீரர் நாள் நவம்பர் – 27“

யாழ்ப்பாணம் – கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் „மாவீரர் நாள் நவம்பர் – 27“ என எழுதப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவல்துறை புலனாய்வாளர்கள் ஆகியோரின் ரோந்து நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவுகூரும் முகமாக „மாவீரர் நாள் நவம்பர் – 27“  என  எழுதப்பட்டுள்ளது.