April 19, 2024

தடைகளை உடைத்து தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் தடைகளை உடைத்துக்கொண்டு பொதுமக்களால் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில்

மாவீரர் நாள் நினைவேந்தப்பட்டுள்ளது.பலநூற்றுகணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுரகர்கள் , பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு பொதுச் சுடரேற்றி, விளக்கேற்றி மலர்தூபி வணக்கம் செலுத்தியுள்ளனர்.