März 28, 2024

நாடு க-த-அ- கனடிய உறுப்பினர்களின் பணிமனையில் மாவீரர்களுக்கான வணக்க செலுத்தும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது

உலகெங்கும் பல நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களின் பணிமனையில் மாவீரர்களுக்கான வணக்கம் செலுத்தும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

கனடாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அதன் கனடிய உறுப்பினர்களால் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த உறுப்பினர் பணிமனை சிறப்பாக இயங்கிவருகின்றது.

அங்கு இன்றும் நாளையும் கனடா வாழ் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கான தமது வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தும் வகையில் இந்த பீடம் அமைக்கப்பெற்றுள்ளது.
இங்கு காணப்படும் படங்களில் உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மண்டபம் ஒன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் மரியாம்பிள்ளை மரியராசா மற்றும் அதன் அமைச்சர்களில் ஒருவரான றோய் விக்னராஜா ஆகியோர் மாவீர்களிற்கான மரியாதையை செலுத்துவதைக் காணலாம்.

படமும் செய்தியும்; சத்தியன்